News March 23, 2024

மீண்டும் ஆடுகளத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்

image

பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று மதியம் மொஹாலியில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இப்போட்டியில் களமிறங்க உள்ளார். 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கார் விபத்துக்கு பிறகு, தொடர் பயிற்சியின் மூலம் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார். சுமார் 454 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆடுகளத்தில் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Similar News

News April 29, 2025

பிரபல நடிகர் பிரகாஷ் பெண்டே காலமானார்!

image

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் மராத்தி சினிமாவில் மிக பிரபலமாக இருந்த பிரகாஷ் பெண்டே(82) காலமானார். அவர் பாலு, சாட்டக் சாந்த்னி, நடே ஜாட்லே டான் ஜீவ்னே போன்ற மாபெரும் மராத்தி வெற்றி படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார். சினிமா துறையை தாண்டி இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. மும்பையிலுள்ள பல்வேறு கேலரிகளில் இவரின் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன. #RIP.

News April 29, 2025

ஏன் பயப்படுறீங்க சசி தரூர்? விளாசிய காங். தலைவர்

image

மோடியை புகழும் சந்தர்ப்பத்திற்காக சசி தரூர் காத்துக்கிடக்கிறார் என காங். தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளை காங். உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், காங். MP சசி தரூர் மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், ED, CBI, IT ஏஜென்சிகளை கண்டு சசி தரூர் பயப்படுகிறார் என உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.

News April 29, 2025

அமெரிக்காவின் துரோகம்: மார்க் கார்னி வெற்றிப் பேச்சு

image

அமெரிக்க துரோகத்தை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம் என அந்நாட்டின் <<16252207>>PM <<>>மார்க் கார்னி கூறியுள்ளார். அதோடு, கனடாவை வலுவாக்க மக்கள் உத்தரவிட்டுள்ளனர் எனக் கூறிய PM, வரவுள்ள நாள்களும், மாதங்களும் மிகுந்த சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நெருங்காவிடிலும், சிறு கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலையில் லிபரல் கட்சி உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

error: Content is protected !!