News July 10, 2025

காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட்..

image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். பும்ரா வீசிய 33-வது ஓவரில் அவரின் விரலில் பந்து வலுவாக தாக்கியது. பிசியோ உடனடியாக சிகிச்சை அளிக்க, வலி குறையாததால் பண்ட் வெளியேறினார். ரிஷப் பண்ட்டால் தொடந்து விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

Similar News

News July 11, 2025

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

image

*கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது. *நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, சொல்கிறீர்களோ, செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. *ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும். * அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படையாது,வன்மம் கொள்ளாது,பழிவாங்காது.

News July 11, 2025

கடலூர் கோர விபத்து எதிரொலி: 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்

image

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் தூங்கிக் கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்து, அவர்களை சஸ்பெண்ட் செய்தனர்.

News July 11, 2025

எதனால் லார்ட்ஸ் மைதானத்தில் மணி அடிக்கப்படுகிறது?

image

லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி துவங்குவதற்கு முன் மணி அடிப்பது என்பது மரபாகும். போட்டி தொடங்குகிறது என அறிவிப்பதற்கே இந்நிகழ்வு. கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க முன்னாள் வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இந்தமுறை சச்சினை அழைத்துள்ளார்கள். மன்சூர் பட்டோடி, கவாஸ்கர், வெங்க்சார்கர், கபில் தேவ், கங்குலி ஆகியோர் இதற்கு முன்பு இந்த கெளரவ நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள்.

error: Content is protected !!