News May 11, 2024
ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிகம் நேரம் எடுத்து கொண்டதற்காக அவருக்கு ரூ.30 லட்சம், மற்ற வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அபராதம் விதிக்கப்படுவது 3ஆவது முறை என்பதால், ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
Similar News
News September 19, 2025
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய 140 புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் ஷரியா சட்டங்கள் மற்றும் தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாலினம் மற்றும் வளர்ச்சி, தகவல் தொடர்பில் பெண்களின் பங்களிப்பு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
News September 19, 2025
சாராய பணத்தில் திமுகவின் விழா: அண்ணாமலை

சாராயம் விற்ற பணத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூரில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் யாருக்கு திருடர், ஊழல்வாதி பட்டம் கொடுத்தாரோ (செந்தில் பாலாஜி) அவரை வைத்தே இன்று முப்பெரும் விழா நடத்தியிருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழகத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் எடுபிடி வேலை செய்வதாக சாடினார்.
News September 19, 2025
கணவர், BF ஏமாற்றுகிறாரா? தெரிந்துகொள்ள 3 கேள்விகள்

திருமண உறவிலும் காதல் உறவிலும் விரிசல் விழ முக்கிய காரணமே ஏமாற்றுதல் (அ) சந்தேகித்தல் தான். 3 எளிய கேள்விகளை கேட்பதால் ஓரளவு உண்மையை கணிக்க முடியும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்: 1)ஏன் லேட்டு? இந்த கேள்விக்கு பின் அவர்களின் முகமே சிக்க வைத்துவிடும். 2)உங்கள் போனை பார்க்கலாமா? பதில்சொல்ல தயங்கினால் யோசிக்கவும். 3)உங்கள் வாழ்வில் வேறு யாரும் உண்டா? இதற்கு திருதிரு என முழித்து சிக்கியே விடுவார்கள்.