News April 30, 2024

ஹர்திக் பாண்டியாவை முந்தும் ரிஷப் பண்ட்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 2ஆம் தேதி அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடக்கவுள்ள இத்தொடரில், துணை கேப்டன் பொறுப்புக்கு ஹர்திக் பாண்டியாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அவரை விட சிறப்பாக செயல்பட்டுவரும் ரிஷப், அந்த ரேஸில் தற்போது முன்னிலையில் உள்ளார்.

Similar News

News March 24, 2026

CSK அணியில் இணைந்த ஆஸி. வீரர்

image

காயம் காரணமாக IPL தொடரில் இருந்து CSK அணி வீரர் நேதன் எல்லிஸ் விலகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு மாற்றாக மற்றொரு ஆஸி. வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை CSK ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே IPL-ல் கொல்கத்தா, குஜராத் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம் 8 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவரது தேர்வு பற்றி உங்கள் கருத்து?

News March 24, 2026

BREAKING: தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

image

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு செய்த பரிந்துரையும் மநீம உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என அவர் கூறியுள்ளார். எனினும், திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN & புதுச்சேரியில் போட்டியிட டார்ச் லைட் சின்னத்தை மநீம பெற்றிருந்தது.

News March 24, 2026

பிலிப்பைன்ஸில் எரிபொருள் அவசரநிலை பிறப்பிப்பு

image

மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், நாட்டில் எரிபொருள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதுவே உலகின் முதல் எரிபொருள் அவசர நிலையாகும். பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இருந்தே 98% கச்சா எண்ணெய்யை பிலிப்பைன்ஸ் பெறுகிறது.

error: Content is protected !!