News April 13, 2024

சத்தமே இல்லாமல் சாதித்த ரிஷப் பந்த்

image

டெல்லி அணிக்காக 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 9 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2,570 ரன்களை எடுத்து இப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் 2,382, சேவாக் 2,375 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Similar News

News November 13, 2025

நாட்டாமை சாதிப்படம் கிடையாது: சரத்குமார்

image

‘நாட்டாமை’ சாதிப்படம் கிடையாது என்று சரத்குமார் கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கக்கூடிய ஒருவரின் திறன் உள்ளிட்ட பண்புகளை பற்றி மட்டுமே சொல்லக்கூடிய படமாக அது இருந்தது என்றும், ‘தேவர் மகன்’ படமும் சாதியை திணிக்கும் படமல்ல எனவும் விளக்கமளித்துள்ளார். மாரி செல்வராஜின் படங்கள், ஏற்கெனவே நிகழ்ந்தவற்றை மீண்டும் அழுத்தமாக கூறுவதாக உள்ளதாகவும், தனக்கு சமத்துவமே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

News November 13, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

image

போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ‘உடன்பிறப்பே வா’ என்ற ஒன்-டூ-ஒன் ஆலோசனையை CM ஸ்டாலின் இன்று மேற்கொண்டார். அப்போது, விடுபட்டவர்களில், தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற்றுத் தர திமுகவினர் உதவ வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்போருக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

News November 13, 2025

இந்தியர்களின் சிரமத்தை போக்கிய ஒற்றை லெட்டர்!

image

ரயில் பயணத்தின் போது, கழிப்பறை இல்லாத நிலையை யோசித்து பார்க்க முடியுமா? 1909-க்கு முன், நாட்டில் ரயில்கள் அப்படிதான் இருந்துள்ளன. மக்கள் ஸ்டேஷன் கழிப்பறையையே பயன்படுத்தி உள்ளனர். அப்படி, கழிப்பறையை பயன்படுத்த சென்ற சந்திரா சென் என்பவர், ரயில் புறப்பட்டதால் வேட்டியை சரியாக கட்டாமல் ஓடிவந்து, பெரும் அவமானத்தை சந்தித்துள்ளார். அவர் அன்று ரயில்வேக்கு எழுதிய லெட்டர் தான், கழிப்பறையை கொண்டுவந்துள்ளது.

error: Content is protected !!