News April 7, 2025

ஒரே நாளில் ₹85,854 கோடியை இழந்த பணக்காரர்கள்

image

இன்று உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், இந்தியாவின் 4 பெரும் பணக்காரர்கள் ₹85,854 கோடியை இழந்துள்ளனர். அதிகபட்சமாக அம்பானி ₹30,906 கோடியை இழந்துள்ளார். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள அதானி ₹25,757 கோடியை இழந்துள்ளார். OP Jindal குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் ₹18,888 கோடியையும், HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார், ₹12,878 கோடியையும் இழந்துள்ளனர்.

Similar News

News April 8, 2025

நாேயில்லாமல் வாழனுமா? சந்திரபாபு நாயுடு அட்வைஸ்

image

நோயில்லாமல் வாழ உப்பு, எண்ணெய், சர்க்கரை பயன்பாட்டை குறைக்க ஆந்திர CM சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார். தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும், தினமும் அரை மணி நேரம் மெடிடேசன், பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 4 பேர் கொண்ட குடும்பம் மாதத்திற்கு 600 கிராம் உப்பு, 2 லிட்டர் சமையல் எண்ணெய், 3 கிலோ சர்க்கரை பயன்படுத்தினாலே போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News April 8, 2025

ஹீரோயினாகும் குஷ்பூ மகள்?

image

குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இவருடைய போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்தது. அப்போது முதலே சினிமாவில் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஒருவேளை அவர் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தால், தனது அம்மாவை போல், முன்னணி நடிகையாக வலம்வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

News April 7, 2025

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

image

பாஜக மாநிலத் தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லிக்கு பயணப்பட்டுள்ளார். நாளை காலை அவர் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய தலைவரை தேடும் பணியில் டெல்லி பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!