News April 7, 2025
ஒரே நாளில் ₹85,854 கோடியை இழந்த பணக்காரர்கள்

இன்று உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், இந்தியாவின் 4 பெரும் பணக்காரர்கள் ₹85,854 கோடியை இழந்துள்ளனர். அதிகபட்சமாக அம்பானி ₹30,906 கோடியை இழந்துள்ளார். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள அதானி ₹25,757 கோடியை இழந்துள்ளார். OP Jindal குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் ₹18,888 கோடியையும், HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார், ₹12,878 கோடியையும் இழந்துள்ளனர்.
Similar News
News April 8, 2025
6 வயது சிறுமி ரேப் செய்து கொலை: காமக் கொடூரன் கைது!

காமக் கொடூரர்களின் கைகளில் சிக்கி பிஞ்சுகள் மாண்டுபோவது இன்றளவும் தொடர்கதையாகவே உள்ளது. சத்தீஸ்கரில் 6 வயது சிறுமியை அவரது உறவினரே ரேப் செய்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. நவராத்திரி விழாவிற்காக பாட்டி வீட்டிற்குச் சென்ற அந்த சிறுமியிடம் அத்துமீறிய சோமேஷ், அவளை கொலை செய்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரரின் காரில் உடலை மறைத்துள்ளான். போலீஸ் விசாரணையில் சிக்கியதால், சோமேஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.
News April 8, 2025
IPL: புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்…!

‘ஸ்விங் கிங்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் புவனேஷ்வர் குமார், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆர்சிபி அணியில் தற்போது விளையாடிவரும் அவர்(184), பிராவோவின்(183) சாதனையை தகர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாஹல் (206), சாவ்லா (192) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் புவனேஷ்வர் குமார் உள்ளார்.
News April 8, 2025
அடுத்த விழாவுக்கு தயாராகும் அயோத்தி!

அயோத்தி அடுத்த விழாவுக்கு தயாராகி வருகிறது. சரியாக ஓராண்டுக்கு முன் பால ராமரின் பிராண பிரதிஷ்டை அயோத்தியில் கோலாகலமாக நடந்தது. இந்த சிலையை கர்நாடக சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி இருந்த நிலையில், முதல் மாடியில் பிரம்மாண்ட அரச தர்பார் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், அடுத்த மாதம் தர்பார் திறக்கப்படவுள்ளது.