News October 23, 2025

மழையில் பாழாகும் நெல் மூட்டைகள்… யார் பொறுப்பு?

image

கொள்முதலுக்கு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. விவசாயிகள் கடன்பட்டு அறுவடை செய்ததை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு பாதுகாப்பான கிடங்கை கூட அரசால் கட்ட முடியாதா? ஒவ்வொரு கிடங்கிலும் 10,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றனவாம். பசி போக்கும் உணவை பாதுகாக்க முடியவில்லை எனில், மாடல் ஆட்சிகளாலும், வல்லரசு பெருமையாலும் என்ன பயன் என மக்கள் கேட்கின்றனர்.

Similar News

News October 23, 2025

பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் புதிய அறிவிப்பு

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.23) காலையில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News October 23, 2025

BREAKING: கட்சியில் இருந்து விலகினார்

image

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மறைந்த MLA EVKS இளங்கோவனின் நெருங்கிய நண்பருமான நாசே ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் கடலூர் (அ) மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிட விரும்பிய அவருக்கு சீட்டு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் அதிமுக, பாஜகவினர் தங்கள் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

News October 23, 2025

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!