News March 10, 2025
REWIND: கோவிட் பெருந்தொற்று அறிவிக்கப்பட்ட நாள்

2020ஆம் ஆண்டு இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.
Similar News
News March 11, 2025
நாக்பூரில் இருந்து வரலாறு எழுதப்படாது: கனிமொழி

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என பாஜக MP நிஷிகாந்த் துபே கூறியதை சுட்டிக்காட்டி, வரலாறு நாக்பூரில் எழுதப்படவில்லை என கனிமொழி சாடியுள்ளார். தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் செழித்து வளரும் மொழி எனவும், சமஸ்கிருதம் போல் பாஜகவின் பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும் மொழி அல்ல எனவும் அவர் விமர்சித்துள்ளார். பாஜகவின் பொய்களை விடவும் தமிழ் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2025
ராசி பலன்கள் (11.03.2025)

➤மேஷம் – பரிசு ➤ரிஷபம் – தனம் ➤மிதுனம் – தேர்ச்சி ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – ஓய்வு ➤கன்னி – சினம் ➤துலாம் – நஷ்டம் ➤விருச்சிகம் – மறதி ➤தனுசு – ஆதரவு ➤மகரம் – பக்தி ➤கும்பம் – சலனம் ➤மீனம் – ஓய்வு.
News March 11, 2025
வீடியோ காலில் ஆப்ரேஷன்.. கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்

பிஹாரில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளார். அப்போது டாக்டர் சஞ்சய் டெல்லியில் இருந்ததால், தனது உதவியாளரை வீடியோ காலில் அழைத்து தான் சொல்ல சொல்ல ஆப்ரேஷன் செய்ய சொல்லி இருக்கிறார். இதில், தவறு நடக்கவே கர்ப்பிணி உயிரிழந்த கொடுமை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஹாஸ்பிடல் நிர்வாகத்திற்கு ஆதரவாக, போலீஸ் செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.