News August 9, 2024
ஆக.20 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம்

2025 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை, ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மேற்கொள்ள, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை 2025 ஜனவரி 26ஆம் தேதி வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல், அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Similar News
News November 28, 2025
பூத் ஏஜெண்டுகள்.. விஜய் முக்கிய உத்தரவு

தவெக பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். பூத் ஏஜெண்டுகளுக்கான விண்ணப்பங்களை விரைவில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு தவெக தரப்பில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு ஏஜெண்டு என்ற எண்ணிக்கையை 10-ஆக உயர்த்த தவெக அண்மையில் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
News November 28, 2025
டாப் 10-ல் ஹைதராபாத் பிரியாணி

இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகளில் ஒன்றான ஹைதராபாத் பிரியாணி உலகளவில் சிறந்த உணவு என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ‘டேஸ்ட் அட்லாஸ்’ வெளியிட்டுள்ள சிறந்த 50 அரிசி உணவுகள் பட்டியலில், இந்தியாவில் இருந்து ஹைதராபாத் பிரியாணி மட்டுமே இடம்பிடித்துள்ளது. சிறந்த டாப் 10 உணவுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை பிரியாணி பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 28, 2025
நாளை பள்ளிகள் 10 மாவட்டங்களில் விடுமுறை

புயல் எதிரொலியாக நாளை (நவ.29) நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விழுப்புரம், தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ல் மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறை.


