News May 10, 2024
அனைத்து தடுப்பூசியையும் மறு ஆய்வு செய்க: மருத்துவர்கள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படலாம் என ஒப்புக்கொண்டுள்ள அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அதை வாபஸ் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தடுப்பூசியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Similar News
News September 23, 2025
10, 12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமா?

தமிழக சட்டப் பேரவை தேர்தல் 2026 மே 2-வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்னரே முடிப்பது மட்டுமல்லாமல், முடிவுகளையும் மே முதல் வாரத்திலேயே வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்.24 என்பதால், ஏப்.10-ம் தேதிக்குள் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாம்.
News September 23, 2025
12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைவதை தவிர்க்க, வெளியே செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.
News September 23, 2025
இந்தியாவில் முதன் முதலாக சாதித்த பெண்கள்

இந்தியாவில் தத்தம் துறைகளில் முதன் முதலாக சாதித்த பெண்களின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம். பெண்களின் சக்தியையும் திறமையையும் வெளிப்படுத்தி இவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் பணி அரசியலுக்கும், பெண்கள் உரிமைகளுக்கும் முன்னோடியாக உள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த முதல் பெண் யாரேனும் விடுபட்டு இருந்தால், கமெண்ட்டில் சொல்லுங்கள்.