News March 20, 2024

3 ஆண்டுகளில் ₹1,229 கோடி வருவாய்

image

டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ₹1,229 கோடி வருவாய் ஈட்டியதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஏழைகளின் ரதம் என்று அழைக்கப்படும் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு செய்துவிட்டு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுகள் மூலம் ₹1,229 கோடி கிடைத்ததாக RTI-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.

Similar News

News April 21, 2025

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு கூடும் சட்டப்பேரவை!

image

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

News April 21, 2025

வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீர்

image

அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். எனவே, மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.

News April 21, 2025

கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன முதல்வர்.. பாமக திட்டம் என்ன?

image

திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும் என்று விளக்கியுள்ளதன் மூலம் புதியவர்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!