News March 19, 2024
விஜய் கட்சியில் இணைந்த ரேவந்த் சரண்

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கின் இயக்குநர் ரேவந்த் சரண், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “20 வருடங்களுக்கும் மேலாக அவரது ரசிகராக இருந்து வருகிறேன். தமிழகத்தை முற்போக்கான, ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றும் அவரது சிந்தனையுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 7, 2025
Gpay, Phonepe-ல் வரம்பு ₹10 லட்சமாக அதிகரிப்பு

வரும் செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) தினசரி வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை தான் அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.
News September 7, 2025
மகளிர் உரிமை தொகை நிச்சயம்: உதயநிதி உறுதி

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்த தகுதியுள்ள மகளிருக்கு நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது 1.20 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், அது மேலும் அதிரிக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அவர் வழங்கினார்.
News September 7, 2025
இயக்குநராகும் கென்.. முதல் படத்திலேயே 3 ஹீரோயின்கள்!

கென் கருணாஸ் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கி நடிக்கும் படத்தில் 3 ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி அப்பலா, மலையாள நடிகை அனிஸ்மா மற்றும் ஹிந்தி சீரியல் நடிகை பிரியன்ஷி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், கென்னின் தந்தையாக மலையாள நடிகர் சுராஜ் வென்ஜரமூடு, அம்மாவாக தேவதர்ஷினி நடிக்கின்றனர். பள்ளி பருவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.