News March 19, 2025
அரசு ஊழியர்களின் Retirement.. மத்திய அரசின் விளக்கம்

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவோ, குறைக்கவோ திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2025
இரட்டை நாக்கு ஏன்? எ.வ.வேலு கோபம்

தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்ற பாமக MLA ஜி.கே மணியின் கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக பதிலளித்துள்ளார். திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க அரசு தயாராக இருந்தும், அந்த பணிகளை மேற்கொள்ள விடாமல் போராட்டம் என்ற பெயரில் பாமக தடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது தருமபுரியில் சிப்காட் அமைக்க கேட்பது பாமகவின் இரட்டை நாக்கை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News March 20, 2025
இந்தியா மகிழ்ச்சியான நாடாக மாற என்ன செய்யலாம்?

<<15824235>>மகிழ்ச்சி<<>> குறித்து வெளியான பட்டியல் இந்தியாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நடக்கும் உக்ரைன், பாலஸ்தீன மக்களை விட நம் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதே அதற்குக் காரணம். 147 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 118வது இடமே கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னே இருக்கிறது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வர என்ன செய்யலாம்?
News March 20, 2025
சனிப்பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு சிக்கல்!

சனி பகவான் மார்ச் 29இல் மீன ராசியில் நுழைவதால் 3 ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) மேஷம்: பணப்பிரச்னை ஏற்படும். உடல்நல பாதிப்பு உண்டாகும். தொழிலில் தடை உருவாகும். 2) கும்பம்: வேலையில் இடையூறுகள் ஏற்படும். பணம் கையில் நிற்காது. குடும்பத்தில் மோதல்கள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. 3) மீனம்: உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். நிதிநிலை சீராக இருக்காது. நம்பிக்கை குறையும்.