News April 28, 2024

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்

image

ஆசிரியா் ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சாா்ந்த தணிக்கைத் தடை நிலுவை இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக் காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சாா்ந்த தணிக்கை தடைகளுக்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

ECI மீதான குற்றச்சாட்டை மக்கள் ஏற்கவில்லை: EPS

image

பிஹார் தேர்தல் வெற்றிக்கு, PM மோடி, அமித்ஷா மற்றும் நிதிஷ்குமாருக்கும் EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கூட்டணியின் போலி பிரசாரங்களை பிஹார் மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ECI மீதான இண்டியா கூட்டணியின் குற்றச்சாட்டை மக்கள் ஏற்கவில்லை என தெரிவித்த அவர், NDA-வின் கூட்டுத்தலைமைக்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News November 14, 2025

200 இடங்களில் NDA முன்னிலை

image

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி 200 இடங்களில் முன்னிலையில் உள்ளது. MGB கூட்டணி 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. BJP – 91, JD(U) – 81, RJD – 26, INC – 4, AIMIM – 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

News November 14, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தார் ஆட்சியர்

image

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால், நாளை பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளைய விடுமுறை ஈடுசெய்ய ஜன.3-ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!