News December 29, 2024

2025 பிப்ரவரியில் ரிசல்ட்: TNPSC அறிவிப்பு

image

நேர்முகத்தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணித்தேர்வு முடிவுகள் 2025 பிப்ரவரியில் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது. உதவி பொறியாளர், வேளாண் அதிகாரி உள்ளிட்ட 652 காலியிடங்களை நிரப்ப, கடந்த OCT-ல் தேர்வு நடத்தப்பட்டது. 1 லட்சத்திற்கும் குறைவானவர்களே எழுதியதால், விரைவில் முடிவுகள் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்த நிலையில், 4 மாதங்கள் கழித்து முடிவுகள் வெளியாக உள்ளது.

Similar News

News March 13, 2026

பெட்ரோல், கேஸ் சிலிண்டர்.. அடுத்த அதிர்ச்சி

image

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகவே உள்ளதாகவும், சில கட்டுப்பாடுகள் என்பது தற்காலிகமானதே என அரசு கூறியிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை இருமடங்கு உயர்ந்ததால், நேற்று இரவு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சில பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், ஹோட்டல்களில் உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 13, 2026

சமையல் எண்ணெயின் விலை உயர்ந்தது

image

போரின் விளைவால் சமையல் எண்ணெயின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது விலை கிலோவுக்கு ₹1 – ₹4 வரை உயர்ந்துள்ளன. சன்ஃபிளவர் எண்ணெய் ₹4 உயர்ந்துள்ள நிலையில், பாமாயில் ₹2.50, கடலை எண்ணெய் ₹2, சோயாபீன் எண்ணெய் ₹1 என உயர்ந்துள்ளன. தனது வெஜிடபிள் ஆயில் தேவையில் சுமார் 90%-ஐ இந்தியா வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.

News March 13, 2026

தேர்தலில் போட்டியிடமாட்டேன்: வைகோ

image

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இப்போது மட்டுமல்ல, ஒருகாலமும் பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். பார்லிமென்ட்டில் மனநிறைவுடன் பணியாற்றி 1,300 முறை பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக, 3 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

error: Content is protected !!