News March 19, 2025
இருமுடி இல்லாமல் சபரிமலை செல்ல கட்டுப்பாடு

இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதன்மூலம் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என தேவசம்போர்டு விளக்கமளித்துள்ளது.
Similar News
News September 20, 2025
தமிழ்நாட்டில் ”கஞ்சா” ஆம்லேட்: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் தாரளமாக கிடைப்பதால், தமிழக இளைஞர்கள் சீரழிவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது; ஆம்லெட்டில் கூட கஞ்சாவை கலக்கி விற்கிறார்கள் என சாடிய அவர், போதைப்பொருள் அதிகரிப்பு பற்றி சட்டசபையில் பலமுறை பேசினேன். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத CM, இப்போது தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட CM நமக்கு தேவையா என கேள்வி எழுப்பினார்.
News September 20, 2025
இவ்வளவு விலையா?

இன்றைய உலகில் விலையை எது வரையறுக்கிறது. ஆடம்பரமான உடைமைகளா? தனித்துவமான பொருள்களா ? பழைமையான வரலாற்று சிறப்புடையதா? பல்வேறு காரணிகள் உள்ளன. அந்த வகையில் மேலே, உலகில் மிகவும் விலை உயர்ந்த சிலவற்றை கொடுத்து இருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த விலை உயர்ந்தவை ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 20, 2025
₹1,20,000 கடன் வழங்குகிறது தமிழக அரசு.. GOOD NEWS

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்குவதற்காக 7% வட்டி விகிதத்தில் ₹1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுவதாக TN அரசு அறிவித்துள்ளது. கறவை மாடு ஒன்றுக்கு ₹60,000 கடன் வழங்கப்படும். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் சமர்பித்தால், கடன் (குடும்பத்தில் ஒருவருக்கு ) வழங்கப்படும்.