News April 22, 2024
தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”

தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை குறிப்பிடும் வகையில் “Rest in Peace” என்று பதிவிட்டுள்ளார்.
Similar News
News January 5, 2026
தமிழ் நடிகர் காலமானார்… கடைசி PHOTO

பிரபல நடிகர் லொள்ளு சபா <<18763586>>வெங்கட் ராஜ்<<>> காலமான நிலையில், உயிரற்று கிடக்கும் அவரின் கடைசி போட்டோ வெளிவந்து, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலை சென்னை வேளச்சேரியில் அவரின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. தங்களை இத்தனை ஆண்டுகளாக மகிழ்வித்த ஆருயிர் நண்பன் உடன் இல்லையே என்ற சோகம் மனதில் நிறைந்தபடி, லொள்ளு சபா குழுவினரும், சினிமா நட்சத்திரங்களும் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News January 5, 2026
தவெகவில் இணைய திட்டமா? MLA ஐயப்பன் ரியாக்ஷன்

OPS ஆதரவாளரான MLA ஐயப்பன் தவெகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அவர், தவெகவில் இணைவதாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவித்துள்ளார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்றிருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என்று கூறிய அவர், தான் தற்போது மதுரையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடைசி வரை OPS-வுடன் தான் இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 5, 2026
மீண்டும் அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

தமிழகம் வந்துள்ள அமித்ஷா, பியூஷ் கோயல் ஆகியோருடன் 2-ம் நாளாக இன்றும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கு மேல் பாஜக தரப்பில் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில். மீண்டும் சந்தித்துள்ள எஸ்.பி.வேலுமணி, NDA கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை விரிவாக ஆலோசித்து வருகிறார்.


