News January 7, 2025
சத்துணவு பணியாளர்களின் பொறுப்பு படி ₹1000ஆக உயர்வு

சத்துணவு பணியாளர்களின் கூடுதல் பொறுப்பு படியை ₹600ல் இருந்து ₹1000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சத்துணவு பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து வரும் விலைவாசி காரணமாகவும், அவர்களுக்கு நாளென்று ₹20 வீதம் மாதத்திற்கு ₹600 ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படி, ஒரு நாளுக்கு ₹33 வீதம், மாதத்திற்கு ₹1000ஆக உயர்த்துவதாக கூறியுள்ளது.
Similar News
News January 18, 2026
ஜனவரி 18: வரலாற்றில் இன்று

*1896-எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது. *1941-இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் படைகள் இத்தாலிய கிழக்கு ஆப்பிரிக்காவில் போரை தொடங்கியது. *1948-மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மகாத்மா காந்தி தொடங்கிய 121 மணி நேர உண்ணாவிரதத்தை ஜனவரி 18 அன்று முடித்தார். * 1999-பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென்னுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு.
News January 18, 2026
டிரம்ப் குற்றவாளி: கொமேனி

ஈரானின் உச்ச தலைவர் கொமேனி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியதாக அமெரிக்க அதிபர் டிரம்பை குற்றவாளி என்று கூறியுள்ளார். போராட்டங்களின் போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள்தான் பெரும் சேதங்களை ஏற்படுத்தி, பல ஆயிரம் பேரைக் கொன்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதற்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கொமேனி எச்சரித்துள்ளார்.
News January 18, 2026
இந்திய அரசியலமைப்பு திருத்தம் வரலாறு தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டமே உலகிலேயே அதிக திருத்தங்களுக்கு உள்ளான அரசியலமைப்பு சட்டமாகும். நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இதுவரை 106 முறை திருத்தப்பட்டுள்ளது. கடைசியாக செப்டம்பர் 2023-ல் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கியது.


