News May 15, 2024

தனி மனித உணர்வுக்கு மதிப்பளியுங்கள்

image

தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, தரம் தாழ்த்தி பேசுவது ஏற்புடையது அல்ல என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தனது மனைவி சைந்தவியை பிரிந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், அனைவரிடமும் கலந்தாலோசித்து, இருவரும் பரஸ்பரமாக தான் பிரிந்தோம் என்றும், ஆதங்கமான விமர்சனங்கள் எங்கள் மனதை காயப்படுத்துகிறது என்பதால், தனி மனிதனின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 8, 2025

ஆகஸ்ட் 8: வரலாற்றில் இன்று

image

* 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயர் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. *1942 – இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. *1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. *2014 – ஆப்பிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக பொதுநல அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது.

News August 8, 2025

இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சீனா

image

இந்திய பொருள்களுக்கு 50% வரிவிதித்த டிரம்பை, இந்தியாவிற்கான சீன தூதர் Xu Feihong சாடியுள்ளார். கொடுமைகாரர்களுக்கு ஒரு அங்குலம் கொடுத்தால், அவர்கள் ஒரு மைல் தூரம் செல்வார்களாம் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்கா வரிவிதிப்பை மற்ற நாடுகளை அழுத்தும் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், ஐநா மற்றும் உலக வர்த்தக விதிகளை மீறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News August 8, 2025

ரேப் கேஸில் பாக்., வீரர் கைது

image

பாக்., கிரிக்கெட் வீரர் ஹைதர் அலியை பாலியல் வன்கொடுமை வழக்கில் இங்கி., போலீசார் கைது செய்துள்ளனர். பாக்., ஏ அணிக்காக விளையாட இங்கி., பயணம் மேற்கொண்டபோது, பாக்., வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரை சஸ்பெண்ட் செய்த PCB, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியது.

error: Content is protected !!