News March 18, 2024

மக்களுக்கு சேவை செய்ய ஆளுநர் பதவி ராஜினாமா

image

மக்கள் பணியை நேரடியாக செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தனது முடிவுக்கு பாஜக தலைமை தடை விதிக்கவில்லை என விளக்கமளித்தார். மேலும், வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட உள்ளதால் தனது அன்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Similar News

News December 29, 2025

30 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை.. ஆனந்தத்தில் கிராமம்

image

இத்தாலியின் Pagliara dei Marsi என்ற கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. 20 பேர் மட்டுமே இருந்த ஊரில் ஸ்கூல்கள் மூடப்பட்டன, எங்கு பார்த்தாலும் முதியவர்கள் மட்டுமே காணப்பட்டனர். ஏன் இந்த கொடுமை என மனம் துவண்டு போனவர்களுக்கு, நம்பிக்கையை கொடுக்கும் விதமாக லாரா என்ற பெண் குழந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன் பிறந்துள்ளது. குழந்தையின் வருகையை உள்ளூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

News December 29, 2025

BREAKING: பாமக புதிய தலைவர் அறிவிப்பு

image

பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து, சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயல்தலைவராக காந்திமதி, கெளரவ தலைவராக ஜி.கே.மணி, பொதுச் செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2026 தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News December 29, 2025

மும்பை மாநகராட்சி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

image

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தாராவியை சேர்ந்த தமிழ்ப் பெண் மஞ்சுளா கதிர்வேல் வேட்பாளராக களமிறங்குகிறார். MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்தல் நடக்கிறது. மும்பையின் 227 வார்டுகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மஞ்சுளா உட்பட 15 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் நிறைந்த மும்பை மாநகராட்சிக்கு சில நல்லவர்கள் தேவை என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!