News March 18, 2024

மக்களுக்கு சேவை செய்ய ஆளுநர் பதவி ராஜினாமா

image

மக்கள் பணியை நேரடியாக செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தனது முடிவுக்கு பாஜக தலைமை தடை விதிக்கவில்லை என விளக்கமளித்தார். மேலும், வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட உள்ளதால் தனது அன்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Similar News

News September 3, 2025

இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு.. குவியும் வாழ்த்து

image

உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது. ‘இட்லி கடை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள அவர், தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்பநிதியின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதேபோல், திமுகவினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News September 3, 2025

யாரும் எதிர்பாராத காம்போ.. புது படம் தொடங்கிருச்சு!

image

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் வழக்கறிஞர்களாக நடிக்கின்றனர். இந்த படம் கோர்ட் ரூம் டிராமாவாக எடுக்கப்படவுள்ளது. இதில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், தீபா, மாலா பார்வதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

News September 3, 2025

நேருவின் பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை

image

முன்னாள் PM நேருவின் பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் LBZ பகுதியில் 3.7 ஏக்கரில் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது. இந்த பங்களா, ராஜஸ்தான் அரசு குடும்பத்திற்கு சொந்தமானது. இந்த பங்களாவிற்கு ₹1,400 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 2024 முதல் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது இதை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

error: Content is protected !!