News April 15, 2025
டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. இது வேற ரகம்

பல நிறுவனங்களில் ஊழியர்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு பின் குப்பை போல் தூக்கி எறிவதை பார்த்திருப்போம். இதனை உணர்த்தும் வகையில் ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்த விதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் தன்னை சரியாக நடத்தாத நிறுவனத்துக்கு, டாய்லெட் பேப்பரில் ஊழியர் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை Linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News April 18, 2025
வெள்ளிக்கிழமையில் அருள் தரும் அம்பாள் மந்திரம்..!

அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய தினம், குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க இந்த அம்பாள் மந்திரத்தை சொல்லுங்க.
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!
News April 18, 2025
சீனாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்!

அமெரிக்கா – சீனாவுக்கு இடையே வர்த்தகப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. 245% அளவுக்கு வரியை விதித்ததால், ஆவேசத்தில் உள்ள சீனா, இனி அமெரிக்காவை கண்டுகொள்ளப் போவதில்லை என தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், சீன அதிகாரிகள் தன்னை சந்திக்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, ஜப்பான், இத்தாலி நாடுகளை போல சீனாவும் வரி ஒப்பந்தம் குறித்து தன்னிடம் பேச விரும்புகிறது என கூறியுள்ளார்.
News April 18, 2025
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் MLA உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.