News April 15, 2025
டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. இது வேற ரகம்

பல நிறுவனங்களில் ஊழியர்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு பின் குப்பை போல் தூக்கி எறிவதை பார்த்திருப்போம். இதனை உணர்த்தும் வகையில் ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்த விதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் தன்னை சரியாக நடத்தாத நிறுவனத்துக்கு, டாய்லெட் பேப்பரில் ஊழியர் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை Linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News November 28, 2025
உதயநிதி ஒரு வேங்கை மரம்: துரைமுருகன்

ஸ்டாலினுக்கு பிறகு கட்சியை உதயநிதி நடத்துவாரா என்பதில் பலருக்கு இருந்தது போல் தனக்கும் பயம் இருந்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் புலிக்கு பிறந்தது பூனைக்குட்டி அல்ல, அது ஒரு வேங்கை மரம், எளிதாக வெட்டி வீசிவிட முடியாது என உதயநிதி நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் திறமை, இளம் குருத்தான உதயநிதிக்கும் உள்ளதாக துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
கன்ஃபூசியஸ் பொன்மொழிகள்

*நல்லதை செய்ய ஆசைப்பட்டாலே போதும், உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.
*உண்மையான அறிவு என்பது, நமக்கு தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே.
*உங்களுக்கு எது விருப்பமில்லையோ, அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.
*ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.
*எல்லாமே அழகு தான், ஆனால் எல்லோர் கண்களும் அதை காண்பதில்லை.
News November 28, 2025
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

கடந்த 6 மணிநேரத்தில் 13 கிமீ வேகத்தில் ‘டிட்வா’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக IMD கூறியுள்ளது. இந்த புயல், நவ.30-ல் வடதமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரம் வழியாக வங்கக்கடல் பகுதியை கடக்கும் என்றும் IMD கணித்துள்ளது. எனவே, அதிகாலை 4 மணி வரை குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். Stay safe


