News April 20, 2025
ஷேக் ஹசீனாவை பிடிக்க இண்டர்போலிடம் கோரிக்கை

ஷேக் ஹசீனா உள்பட 11 பேரை பிடிக்க இண்டர்போலின் உதவியை வங்கதேச இடைக்கால அரசு நாடியுள்ளது. இடைக்கால அரசை கவிழ்க்க சதி மற்றும் உள்நாட்டு போரை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போலிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்படுவார்.
Similar News
News January 14, 2026
உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.
News January 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 580 ▶குறள்: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ▶பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
News January 14, 2026
சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு!

சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 8 வயதான அன்கேஷ், சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில் விளையாடியுள்ளான். அப்போது, அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால் கண்பார்வை பறிபோயுள்ளது. கடந்த மாதம் இதே மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது. பெற்றோர்களே கவனம்.


