News April 28, 2024
மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் 30ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின்போது, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங், ஒயினாம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்ததால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்நிலையில், அந்த வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
PM மோடியின் தீபாவளி பரிசு… ₹1 லட்சம் Gift?

தீபாவளி பரிசாக GST வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படுமென PM மோடி அறிவித்திருந்தார். தற்போது, புதிய கார்களுக்கு 28% – 49% வரை வரி (₹10 லட்சத்துக்கு கார் வாங்கினால் ₹2.90 லட்சம் வரி) விதிக்கப்படுகிறது. ஆனால் GST வரி சீர்திருத்தங்களால் 18% ஆக குறைய வாய்ப்புள்ளது. இதனால், ₹1 லட்சம் வரை வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸுக்கான GST வரியும் குறைய வாய்ப்புள்ளது.
News August 26, 2025
பொது அறிவு வினா- விடை!

1. இந்தியாவின் முதல் செயற்கை கோளின் பெயர் என்ன?
2. போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
3. பெண்களை முதல்முதலில் காவல்துறையில் சேர்த்த நாடு எது?
4. டேபிள் டென்னிஸில் பயன்படுத்தப்படும் பந்தின் பெயர் என்ன?
5. இரட்டைப் புலவர்களின் பெயர் என்ன?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 26, 2025
திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது: தமிழிசை

திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டுமென தமிழிசை தெரிவித்துள்ளார். அமைச்சர் TRB ராஜாவின் மகன் <<17517914>>அண்ணாமலையிடம் பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து<<>> கையில் வாங்கினார். இச்சம்பவம் விவாதமான நிலையில், இதுபற்றி பேசிய தமிழிசை, கல்வி நிறுவனங்களில் விருத்தினர்களுக்கு மரியாதை செய்ய வேண்டியது கடமை. அங்கு தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரி கிடையாது என்றார்.