News April 24, 2024

8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

image

அருணாச்சலில் கடந்த 19ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலுடன் சட்ட சபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில், சில இடங்களில் வன்முறை சம்பவங்களும், சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சேதமடைந்தன. இதனால் அங்கு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, நாளை (ஏப்.24) அங்கு மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

Similar News

News January 2, 2026

‘தமிழகத்தில் பொங்கல் பரிசாக ₹5,000’

image

பொங்கலுக்கு ₹5,000 கொடுக்க முடியாமல் TN அரசு திணறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் தனியாரிடம் கடன் வாங்கியாவது பரிசுத் தொகை கொடுப்பார்கள் என விமர்சித்துள்ளார். முன்னதாக, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு ₹248 கோடி ஒதுக்கியது. இதையடுத்து, ₹3000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியடுவார் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

News January 2, 2026

பெட்ரோல் ஊற்றி கணவர் கொலை.. மனைவி வேதனை

image

வங்கதேசத்தில் இந்துக்கள் அமைதியாக வாழ விரும்புவதாக, தாக்குதலில் <<18734078>>உயிரிழந்த கோகோன் தாஸின்<<>> மனைவி சீமா தாஸ் தெரிவித்துள்ளார். யாருடனும் எந்த வாக்குவாதமும் செய்யாத தனது கணவரை எதற்காக மிகக் கொடூரமாக கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை என்று வேதனை கூறியுள்ளார். தனது கணவரின் தலையிலும், முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தாக்குதல்காரர்கள் தீ வைத்ததாக அவர் கண்ணீர் மல்கினார்.

News January 2, 2026

விஜய்க்கு மறைமுக பதிலடி கொடுத்த உதயநிதி

image

2026 தேர்தலில், DMK-TVK இடையே தான் போட்டி என விஜய் கூறியிருந்தார். விழா ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனாவும் அரையிறுதியில் ADMK-ஐ தோற்கடித்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவையே பார்ப்பதாக DCM உதயநிதி பேசியுள்ளார். ADMK பலவீனமாக இருந்தாலும், தேர்தலில் அக்கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி எனக் கூறி விஜய்யின் பேச்சுக்கு மறைமுகமாக உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!