News April 3, 2025

பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளர் காலமானார்

image

பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான வேணுகோபால பணிக்கர்(79) காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர், அண்ணாமலை பல்கலையில் பயின்றவர். ஜெர்மனியில் நடந்த முதல் சர்வதேச திராவிட மாநாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு நாவலான ‘கூனந்தோப்பு’ கேந்திர சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளது.

Similar News

News September 16, 2025

வயிற்று கொழுப்பு கரைய இந்த யோகாவை பண்ணுங்க!

image

*தரையில் கால்களை நீட்டி நேராக அமரவும் *வலது காலை மடித்து, கணுக்காலை தரையில் ஊன்றவும் *இடது காலை மடித்து(படத்தில் உள்ளது போல) வைக்கவும் *இடது கையை பின்னோக்கி தரையில் வைத்தும், வலது கையை வலது கால் முட்டியின் மீது வைத்தும் பிடித்து கொள்ளவும் *தலையை பின்னோக்கி பார்த்தபடி திருப்பி, இந்த நிலையில், 15-20 விநாடிகள் வரை இருக்கவும் *இந்த மத்ஸ்யேந்திராசனம் வயிற்று கொழுப்பை குறைக்கும். SHARE.

News September 16, 2025

போராட்டத்திற்கு தயாராக வேண்டும்: வைகோ

image

திருச்சியில் நேற்று மதிமுக மாநாடு நடைபெற்றது. அதில், *கீழடி ஆய்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். *GST வரி சீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும். *30 நாள்கள் சிறையில் இருந்தால் MP, CM பதவி பறிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும். *மரபணு மாற்ற நெல் சாகுபடிக்கு எதிராக போராட்டத்திற்கு தயாராக வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

News September 16, 2025

செவ்வாய்க்கிழமையும் சக்தி வாய்ந்த முருகன் வழிபாடும்!

image

தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை வாரி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள். இன்றே தொடங்குங்கள். SHARE IT.

error: Content is protected !!