News April 20, 2025
கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்: மல்லை சத்யா

இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில், துரை வைகோ – மல்லை சத்யா இடையேயான மோதல் பூதாகரமானது. துரை வைகோவுக்கு 40 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு மல்லை சத்யா கோரிக்கை வைத்துள்ளார். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளரான அவர் பேசினார்.
Similar News
News January 2, 2026
நேதாஜி பொன்மொழிகள்!

*வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *உண்மையான நண்பனாக இரு அல்லது பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம் *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதிவெற்றிக்கு உரியவர்கள் *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்
News January 2, 2026
இந்தியாவில் புல்லட் ரயில்.. வந்தது அறிவிப்பு

நாட்டின் முதல் புல்லட் ரயில், 2027-ம் ஆண்டு ஆக.15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் மும்பை-அகமதாபாத் இடையே 508 கிமீ., தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக சூரத் முதல் பிலிமோரா வரையில் ரயில் சேவை தொடங்கும் என கூறியுள்ளார். 2023-ல் முடிவடைய வேண்டிய பணிகள், 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன.
News January 2, 2026
டெம்போ ஓட்டுநர் டூ ஏர்லைன்ஸ் ஓனர்!

கடினமாக உழைத்தால் டெம்போ ஓட்டுநர் கூட ஏர்லைன்ஸ் ஓனர் என்பதே ஷ்ரவன் குமாரின் வாழ்க்கை கதை. UP-ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் டெம்போ ஓட்டி பிழைப்பு நடத்தியுள்ளார். 2014-ல் கனிமம், போக்குவரத்து துறையில் கவனம் செலுத்தி வெற்றிகண்டுள்ளார். இந்நிலையில் Shankh ஏர்லைன்ஸ் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும் சாமானியர்களுக்கு விமானப்பயணத்தை எளிதாக்குவதே தனது இலக்கு என்று அவர் கூறியுள்ளார்.


