News April 21, 2025
8 மத்திய அமைச்சர்களின் பதவி பறிப்பு?

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை PM மோடி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இதனிடையே, 7 (அ) 8 அமைச்சர்களை விரைவில் மாற்ற உள்ளதாகவும் அதில் சில மூத்த அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
Similar News
News November 18, 2025
மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
News November 18, 2025
மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
News November 18, 2025
SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.


