News September 11, 2025
கட்சி பொறுப்பில் இருந்து கூண்டோடு நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் உச்சம் தொட்ட நிலையில், கோவையில் 3 தலைவர்களை கூண்டோடு நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் VMC மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் N.K.பகவதி மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை குறிவைத்து தலைமை நகர்ந்தாலும், நிர்வாகிகளிடையே உள்கட்சி பூசல் விவகாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
Similar News
News September 11, 2025
கவிதாவை போன்று அன்புமணி நீக்கம்: ராமதாஸ் விளக்கம்

BRS கட்சியில் இருந்து தனது மகளான கவிதாவையே சந்திரசேகர் ராவ் நீக்கியது போல், தன்னுடைய மகன் அன்புமணியை நீக்கியுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். முன்னதாக, தனது சகோதரனுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தது, டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றது ஆகியவற்றின் கோபத்தை காட்டமாக வெளிப்படுத்தியதால், கவிதா BRS கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதேபோல், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அன்புமணி நீக்கப்பட்டுள்ளார்.
News September 11, 2025
திமுகவில் இணைந்த 1 கோடி பேர் ஒன்றாக உறுதிமொழி

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்குசாவடிதோறும் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினர்களாக்கும் திட்டத்தை திமுக நடத்தி வருகிறது. இதற்காக, கூவி, கூவி ஆட்களை சேர்ப்பதாக திமுக மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் செப்.15-ல் உறுதிமொழி ஏற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி தினகரன்

EPS பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி கூறும் கருத்துகள் சரிதான் என கூறிய அவர், தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைய EPS தான் காரணம் என சாடியுள்ளார். மேலும், செங்கோட்டையன் முயற்சிக்கு தான் முழு ஆதரவாக இருப்பேன் எனவும் மதுரையில் பேட்டியளித்துள்ளார். டிடிவி தினகரனின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?