News March 20, 2024

மக்கள் பணிக்காக ஆளுநர் பதவியை துறந்துள்ளார்

image

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

Similar News

News December 13, 2025

சிகரெட்டை விட இது ரொம்ப டேஞ்சர்.. உடனே கவனியுங்க!

image

உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை & மூளையில் உள்ள மெனிஞ்சியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம் என்கின்றனர். எனவே, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வெச்சிக்கோங்க!

News December 13, 2025

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

image

EX மத்திய அமைச்சர் குசுமா கிருஷ்ணமூர்த்தி(85) டெல்லியில் மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் அமலாபுரம் தொகுதியில் 3 முறை எம்பியாக தேர்வானவர். 1990-ம் ஆண்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் ரசாயன துறையின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர், SC & ST தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். #RIP

News December 13, 2025

ஒரே குடையில் கொண்டுவர PM மோடி திட்டம்!

image

நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு ‘Viksit bharat shiksha adhikshak’என்ற ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் UGC, AICTE, NCTE, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஆணையங்களின் செயல்பாடுகள் இனி ஒரே ஆணையமாக செயல்பட உள்ளது. இதற்கான மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!