News March 20, 2024
மக்கள் பணிக்காக ஆளுநர் பதவியை துறந்துள்ளார்

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.
Similar News
News November 24, 2025
சூப்பர்ஹீரோ ஆகிறார் அர்ஜுன் தாஸ்!

வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்த அர்ஜுன் தாஸ், அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் அடுத்த படத்திற்கு ‘சூப்பர்ஹீரோ’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் வேணுகோபால் இயக்கும் இப்படத்தில் தேஜு அஷ்வினி, சாண்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழு வெளியிட்டுள்ளது.
News November 24, 2025
வங்கி கணக்கில் இருக்கும் பணத்துக்கு ஆபத்து.. ALERT

RBI பெயரில் மெசேஜ் அனுப்பி உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சுருட்டும் மோசடி நடந்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. வங்கி கணக்கு முடங்கப் போவதாக குறிப்பிட்டு ஏதேனும் மெசேஜ் வந்தால், உங்கள் OTP, PASSWORD உள்ளிட்டவற்றை ஷேர் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால், 87997 11259 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உஷார் மக்களே!
News November 24, 2025
சாவு எப்படி வந்தது பாருங்க.. அதிர்ச்சி

சாவு எப்படி வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மதுரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் விஷ்ணுவர்தன்(26) திடீரென உயிரிழந்ததே அதற்கு உதாரணம். தண்ணீர் தாகம் எடுத்த நிலையில், அங்கேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே சக நண்பர்கள், விஷ்ணுவர்தனை ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இளைஞர்களே உடலை பராமரியுங்கள்!


