News March 20, 2024

மக்கள் பணிக்காக ஆளுநர் பதவியை துறந்துள்ளார்

image

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

Similar News

News November 23, 2025

பாடம் கற்றுக்கொண்ட விஜய்

image

கரூர் துயரிலிருந்து விஜய் பாடம் கற்றுக்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அத்துயருக்கு விஜய் தாமதமாக சென்றதே காரணம் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சிக்கு விஜய் 30 நிமிடங்கள் முன்பாகவே வந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தையுடன் சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. யாரும் சோர்வடையாமல் இருக்க உணவும் தரப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் தொண்டர் படை ஈடுபட்டிருந்தனர்.

News November 23, 2025

BREAKING: இந்திய அணியின் கேப்டனாக KL ராகுல் நியமனம்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக KL ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் புதிய கேப்டனான அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 15 பேர் கொண்ட இந்திய அணி(மேலே பட்டியல்) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், துருவ் ஜுரெல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். திலக் வர்மா, ருதுராஜ், ஜடேஜா ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

News November 23, 2025

2-வது டெஸ்ட்: மீண்டெழுமா இந்திய அணி?

image

கவுஹாத்தி டெஸ்ட்டில், 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்துள்ளது. முத்துசாமி, யான்சனின் அபார ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. குல்தீப் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இன்றும் போதிய வெளிச்சமின்மையால் 76.1 ஓவர்களே வீசப்பட்டன. போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு நாளை மிகவும் முக்கியமான நாளாகும்.

error: Content is protected !!