News March 20, 2024
மக்கள் பணிக்காக ஆளுநர் பதவியை துறந்துள்ளார்

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.
Similar News
News November 20, 2025
BIG NEWS: தனியாக கட்சி தொடங்கினார்..பெயர் அறிவிப்பு

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் கூடிய கட்சியின் கொடி அறிமுக விழாவில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News November 20, 2025
ஒரே நாளில் அதிரடியாக ₹3,000 குறைந்தது

வெள்ளி விலை இன்று(நவ.20) கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. 1 கிராம் ₹173-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,73,000-க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா, சீனா போன்ற முக்கிய நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக இந்தியாவில் வெள்ளி விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது சில வாரங்கள் நீடிக்கும் என கணித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.
News November 20, 2025
மெட்ரோ விவகாரத்தில் நடந்தது என்ன? மத்திய அரசு விளக்கம்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் பாஜக அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், TN அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை எனவும் அதனால்தான் திருப்பி அனுப்பியதாகவும் மத்திய அமைச்சர் மனோகர்லால் விளக்கமளித்துள்ளார். மேலும், மக்களுக்கான மெட்ரோ திட்டத்தை ஸ்டாலின் தான் அரசியல் ஆக்குகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


