News March 20, 2024

மக்கள் பணிக்காக ஆளுநர் பதவியை துறந்துள்ளார்

image

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

Similar News

News December 9, 2025

மகளிர் உரிமைத் தொகை ₹1,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கிக் கணக்கில் இன்னும் 3 நாள்களில்(டிச.12) ₹1,000 வரவு வைக்கப்பட உள்ளது. சென்னையில் CM ஸ்டாலின் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யவுள்ளார். திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ₹1 அனுப்பி ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 9, 2025

SA சாதனை படைப்பதை தடுக்குமா இந்திய அணி?

image

கட்டாக்கில் இன்று IND Vs SA முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற புதிய சாதனையை SA படைக்கும். அதேநேரத்தில் தென்னாப்பிரிக்காவை 18 முறை வீழ்த்தி இந்திய அணி லீடிங்கில் இருக்கிறது. AUS, ENG, SA ஆகிய அணிகள் இந்தியாவுக்கு எதிராக தலா 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று யார் ஜெயிப்பாங்க?

News December 9, 2025

BREAKING: விஜய்க்கு சீமான் ஆதரவு

image

விஜய்யை அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்துவரும் சீமான், தற்போது விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில உரிமை கோரிய விஜய்யின் கருத்துக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார். மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என முதலில் நான்தான் புதுச்சேரிக்காக பேசினேன் என்றும், எனது கோரிக்கை வலுபெறகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!