News March 20, 2024
மக்கள் பணிக்காக ஆளுநர் பதவியை துறந்துள்ளார்

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.
Similar News
News December 25, 2025
இந்தியாவுடன் எங்கள் உறவை அமெரிக்கா கெடுக்கிறது: சீனா

இந்தியாவுடனான தங்களது உறவுகளைச் சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்காவின் பென்டகன், சீனா வேண்டுமென்றே இந்திய-அமெரிக்க நட்புக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டியது. இந்நிலையில், தங்களது எல்லைப் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என்று சீனா பதிலடி கொடுத்துள்ளது.
News December 25, 2025
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் படுகொலை

வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில், அம்ரித் மண்டல்(29) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், அவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமீபத்தில், இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 25, 2025
விவசாயத்தில் இந்தியா கெத்து தெரியுமா?

இந்திய விவசாயத்தின் பலம் உங்களுக்கு தெரியுமா? உலகில் மிக அதிக அளவில் விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை அனைத்திலும் கெத்து காட்டுகிறது. அதன்படி, நம் நாட்டின் விவசாய பலத்தை எடுத்துக்காட்டும் சில போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


