News March 20, 2024

மக்கள் பணிக்காக ஆளுநர் பதவியை துறந்துள்ளார்

image

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

Similar News

News November 21, 2025

போலி ORS கலவைகளை உடனே அகற்ற FSSAI உத்தரவு

image

‘ORS’ என்று தவறாக விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்களை உடனடியாக விற்பனையில் இருந்து அகற்ற மாநிலங்களுக்கு, FSSAI உத்தரவிட்டுள்ளது. உண்மையான ORS என்பது வயிற்றுப்போக்கு நோய்களின் போது நீரிழப்பை தடுக்கும் WHO பரிந்துரைத்த மருந்து. எனவே, WHO அங்கீகாரம் பெற்ற ORS கலவைகளை மட்டுமே விற்க வேண்டும் எனக்கூறியுள்ள FSSAI, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News November 21, 2025

தமிழக விரோத நிலைப்பாட்டில் பாஜக: திருமாவளவன்

image

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்புக்கு BJP-ன் தமிழக விரோத நிலைப்பாடே காரணம் என்று திருமாவளவன் சாடியுள்ளார். 2011 மக்கள் தொகை விவரங்களை காட்டி திட்டத்தை நிராகரிப்பது சரியானது அல்ல என்றும், அங்கு கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் சிறிய ஊர்களுக்கு கூட மெட்ரோ ரயில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 21, 2025

BREAKING: நண்பர் அதிரடி கைது.. நடிகர் சிம்பு அதிர்ச்சி

image

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், Ex உதவியாளருமான சர்புதீன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களில் சர்புதீனும் ஒருவர். ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நண்பர் கைதால் சிம்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

error: Content is protected !!