News October 23, 2025

ஏக்கருக்கு ₹50,000 நிவாரணம் வழங்க வேண்டும்: நயினார்

image

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு திமுக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்து 10 நாட்கள் ஆகியும் 8,000 மெ.டன் நெல் மூட்டைகளை, அரசு கொள்முதல் செய்யாததால் நனைந்து வீணானதாக கண்டனம் தெரிவித்துள்ளார். 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், ஏக்கருக்கு ₹50,000 நிவாரணம் வழங்கவும் கோரியுள்ளார்.

Similar News

News October 23, 2025

FLASH: முடிவை மாற்றினார் விஜய்

image

கரூர் சம்பவத்துக்கு, விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஜெ., பாணியில் தன்னுடைய பிரசாரத்தை மீண்டும் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக ஒரு நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

News October 23, 2025

பைசனில் என்னையே பார்க்கிறேன்: அண்ணாமலை

image

தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த அண்ணாமலை, பல காட்சிகளில் தன்னையே பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார். மேலும், தடைகள் அனைத்தையும் கடந்து சாதித்து காட்டிய மணத்தி கணேசன் கதையை மாரி செல்வராஜ் சிறப்பாக காட்டியிருக்கிறார் எனவும், சமூகத்தில் ஒற்றுமை வேண்டும் எனவும் பதிவிட்டிருக்கிறார்.

News October 23, 2025

டிரம்ப்-ஐ Avoid செய்யும் முடிவில் PM மோடி?

image

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் , PM மோடியை போனில் அழைத்து வாழ்த்து கூறியதோடு, பாக்., போர் குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார். ஆனால், Call-ல் அப்படி எதுவும் பேசப்படவில்லை என வெளியுறவுத்துறையில் சிலர் கூறுகின்றனர். டிரம்ப் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை செய்வதால் PM மோடி அப்செட் ஆகியிருக்கிறாராம். இதனாலேயே ஆசியன் மாநாட்டில் அவர் நேரடியாக <<18078238>>பங்கேற்கவில்லை<<>> என கூறப்படுகிறது.

error: Content is protected !!