News December 13, 2024
தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம்

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் CM ஸ்டாலின். மேலும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவோருக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ₹50 ஆயிரமும் வழங்க ஆணையிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
BREAKING: மே.வங்க கவர்னராகிறாரா R.N.ரவி?

தமிழக கவர்னர் R.N.ரவி, மே.வங்க மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே.வங்க CM மம்தா பானர்ஜி இதை தன் X-பதிவில் குறிப்பிட்டுள்ளார். அம்மாநில கவர்னராக இருந்துவரும் சி.வி.ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா செய்ததால், R.N.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார்.
News March 5, 2026
எரிவாயு விநியோகத்தை குறைக்க முடிவு: GAIL

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக GAIL நிறுவனம் தெரிவித்துள்ளது. கத்தாரில் இருந்து இந்தியா ஆண்டுதோறும் பெருமளவு LNG எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது ஹார்முஸ் நீரிணை மூடல், போர் தாக்கம் காரணமாக இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், தங்களது LNG எரிவாயு விநியோகத்தை குறைக்க உள்ளதாக GAIL அறிவித்துள்ளது.
News March 5, 2026
கையாலாகாத பொம்மை CM ஸ்டாலின்: EPS

சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய CM, ஒரு கையாலாகாத பொம்மை CM-மாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். நாங்குநேரி கொலை சம்பவத்தின் ரத்த ஈரம் காய்வதற்குள் இடைக்காட்டூரில் மற்றொரு கொலை நடந்துள்ளதாக கூறிய அவர், அரசை கண்டு குற்றவாளிகள் பயப்படவில்லை என்றார். மேலும், பட்டியலின மக்கள் பகுதியில் தாக்குதல் நடக்கிறது என்றால், திமுக இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது என்று தானே அர்த்தம் எனவும் கேட்டுள்ளார்.


