News August 25, 2024
ஒரே வாரத்தில் ரிலையன்ஸ் மதிப்பு ₹29,634 கோடி உயர்வு

இந்திய பங்குச்சந்தையில் கடந்த வாரம் டாப் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் மதிப்பு ₹95,522 கோடி அதிகரித்தது. அதிகபட்சமாக ரிலையன்ஸ் மதிப்பு ₹29,634 கோடி அதிகரித்து, ₹20,29,710 கோடியாக உயர்ந்தது. அதேபோல, TCS ₹17,167 கோடியும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் ₹15,225 கோடியும், ஏர்டெல் ₹12,268 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ₹11,524 கோடியும் மதிப்பு உயர்ந்தது. இந்த வார சந்தை எப்படி இருக்குமென கணிக்கிறீர்கள்?
Similar News
News November 14, 2025
மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது கட்டாயம் என்பதை பிஹார் மக்கள் நிரூபித்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மோடி அரசின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
News November 14, 2025
SIR பணிகளில் குளறுபடி செய்யும் திமுக: EPS

தமிழக அரசின் தலையீட்டால் SIR பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். ECI விழிப்போடு இருந்து அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். போலி வாக்காளர்களை நீக்க SIR முறையாக நடக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே அதில் குளறுபடி செய்ய திமுக முயல்வதாகவும் சாடியுள்ளார்.
News November 14, 2025
முகத்துக்கு கடலை மாவு போடுறீங்களா? உஷார்!

முக அழகை பராமரிக்க பலரும் கடலை மாவை பயன்படுத்துகின்றனர். என்னதான் இது முகத்தை மிருதுவானதாக மாற்றினாலும், இதை அடிக்கடி பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். வாரத்திற்கு 2-3 முறை கடலை மாவை அப்ளை செய்தால் சருமம் வறண்டு போகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள் போதும். பலருக்கு தெரியாது, SHARE THIS.


