News August 25, 2024

ஒரே வாரத்தில் ரிலையன்ஸ் மதிப்பு ₹29,634 கோடி உயர்வு

image

இந்திய பங்குச்சந்தையில் கடந்த வாரம் டாப் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் மதிப்பு ₹95,522 கோடி அதிகரித்தது. அதிகபட்சமாக ரிலையன்ஸ் மதிப்பு ₹29,634 கோடி அதிகரித்து, ₹20,29,710 கோடியாக உயர்ந்தது. அதேபோல, TCS ₹17,167 கோடியும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் ₹15,225 கோடியும், ஏர்டெல் ₹12,268 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ₹11,524 கோடியும் மதிப்பு உயர்ந்தது. இந்த வார சந்தை எப்படி இருக்குமென கணிக்கிறீர்கள்?

Similar News

News September 16, 2025

உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்: ஆதித்யநாத்

image

பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என சமீபத்தில் SC தீர்ப்பளித்தது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிராக சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், உ.பி., அரசும் சீராய்வு மனுதாக்கல் செய்யவுள்ளது. உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளிக்கப்படுவதாக CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

News September 16, 2025

10th பாஸ்.. தமிழக அரசில் ₹62,000 சம்பளத்தில் வேலை!

image

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையில் 375 பணியிடங்கள் காலியாகவுள்ளன. 18- 34 வயதுக்குட்பட்ட 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்ச சம்பளமாக ₹62,000 வழங்கப்படும். வரும் 30-ம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News September 16, 2025

இந்தி திணிப்புக்கு எதிராக பொங்கிய விஜய்!

image

இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என அமித்ஷா கூறியது, வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் வலுக்கட்டாயமாக ஒரு மொழியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விஜய் கூறியுள்ளார். எனவே, இந்தி திவாஸ் அன்று தெரிவித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!