News May 13, 2024
சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல மறுப்பு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நாய்க்கடிக்கு ஆளான சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் மறுத்து வருகின்றனர். ஆக்ரோஷமான ‘பிட் புல்’ நாய் கடித்ததில் சிறுமியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்நிலையில், இழப்பீடு பெறாமல் சிறுமியை டிஸ்சார்ஜ் செய்ய மாட்டோம் என உறவினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
Similar News
News September 9, 2025
GALLERY: ஆசிய கோப்பையும் அபார ரெக்கார்டுகளும்!

ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியுள்ள, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி தான் இதுவரை பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மாவின் மாஸ் ரெக்கார்டில் தொடங்கி, யாரும் நெருங்க முடியாத பாகிஸ்தானின் மிக மோசமான ரெகார்ட் வரை பலவற்றையும் மேலே கொடுத்துள்ளோம். அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்க Swipe செய்யவும்.
News September 9, 2025
தவெகவை கண்டு பயத்தின் உச்சியில் திமுக: விஜய்

திருச்சியில் N. ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெகவை கண்டு திமுக பயத்தின் உச்சியில் இருப்பதாக கூறிய அவர், போலீசை ஏவி தவெக செயல்பாட்டை முடக்க நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தூக்கத்தை இழந்து முழு நேரமும் தவெகவை வீழ்த்துவது பற்றியே சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?
News September 9, 2025
அடுத்த 2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகள்?

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், அவர்களின் பதவி உயர்வுக்கும் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டமிடலில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருகிறதாம். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் 6 தகுதி தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.