News July 12, 2024

ஹத்ராஸ் நெரிசல் தொடர்பான மனுவை விசாரிக்க மறுப்பு

image

ஹத்ராசில் கடந்த 2ஆம் தேதி சாமியார் ஒருவரின் பிரசங்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கமிட்டி அமைத்து விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டிருந்தது. மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அது வருத்தத்தை தரும் பிரச்னைதான், எனினும் உயர்நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்டது.

Similar News

News November 21, 2025

அரசு ஊழியர்களுக்கு திமுக மீண்டும் துரோகம்: அன்புமணி

image

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படாது என்பது உறுதியாகியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்காமல், அவர்களுக்கு திமுக அரசு மீண்டும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 21, 2025

இறுதி பணி நாள்: CJI கவாய் உருக்கம்!

image

CJI <<18345604>>BR கவாயின்<<>> இறுதி பணி நாள் இன்று. இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் வழியில், அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட முடிந்தவரை முயற்சித்ததாக கூறியுள்ளார். எளிமையாக தீர்ப்புகள் எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறிய அவர், 1985-ல் சட்டம் படிக்க ஒரு மாணவனாக சேர்ந்த தான், இன்று நீதித்துறை மாணவனாகவே விலகுவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

மேலும் ஒரு வாரம்… பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.19-ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், தற்போது நவ.27 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் அச்சிடப்படும் என்பதால், பணிகளை கவனமாக மேற்கொள்ள HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!