News May 16, 2024
41 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

41 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(NPPA) தெரிவித்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும். இந்நிலையில், சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் பிரச்னை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாகவும், இந்தத் தகவலை டீலர்கள், ஸ்டாக்கிஸ்டுகளுக்கு மருந்து நிறுவனங்கள் தெரியப்படுத்தவும், NPPA உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
அரையாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் ஷாக்

அரையாண்டு விடுமுறை (டிச.24), கிறிஸ்துமஸ் பண்டிகை (டிச.25) காரணமாக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், ஆம்னி பஸ்களின் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – நெல்லைக்கு வழக்கமாக ₹1,800 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ₹4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை – கோவைக்கு ₹5,000, சென்னை – மதுரை ₹4,000 என வசூலிக்கப்படுவதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News December 21, 2025
எனக்கு பதவி, பொருள் ஆசை இல்லை: திருமா

கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசை கண்டித்து, விசிக நடத்திய போராட்டங்களை போல எந்த கட்சியினரும் நடத்தவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக மக்களை மறந்து, தனது நலன்பற்றி ஒருபோதும் யோசித்தது இல்லை என்றும் அவர் கூறினார். 10 சீட் கூடுதலாக கேட்டு வாங்குவதால் புரட்சி ஏற்படப் போவதில்லை என்று கூறிய அவர், தனக்கு பதவி, பொருள் ஆசை இல்லாததே திமுக கூட்டணியில் தொடர காரணம் என்று குறிப்பிட்டார்.
News December 21, 2025
மீண்டும் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!

<<18568504>>ஆஸி., துப்பாக்கிச்சூட்டின்<<>> அதிர்ச்சி அடங்குவதற்குள், தெ.ஆப்பிரிக்காவில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள பெக்கர்ஸ்டல் பகுதியில், மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியுள்ளனர். இதில், 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது, தெ.ஆப்பிரிக்காவில் 15 நாள்களில் நடைபெறும் 2-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.


