News October 14, 2024
3 மாவட்டங்களுக்கு நாளை RED ALERT!

வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (அக்.15) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (அக்.16) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 25, 2025
Health Tips: வெறும் வயிற்றில் இத குடிங்க.. இவ்வளவும் சரியாகும்!

தினமும் எழுந்தவுடன் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இந்த 1 கிளாஸ் வெந்தய நீர் குடிப்பதால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன ▶சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ▶வயிற்று வலி, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்றவற்றை குறைக்கிறது ▶கெட்ட கொழுப்புகள் குறையும் ▶சரும நிறத்தை மேம்படுத்தவும், முகப்பரு நீங்கவும் உதவுகிறது ▶நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
News August 25, 2025
EPS தான் முதல்வர் வேட்பாளர்: நயினார் நாகேந்திரன்

ADMK, BJP மீண்டும் கூட்டணி அமைத்தது முதலே ‘கூட்டணி ஆட்சி’ என்ற குரல் பாஜகவில் ஒலித்து வருகிறது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று EPS பேசியதால் குழப்பம் அதிகரித்தது. இந்நிலையில், NDA கூட்டணியின் தமிழக தலைவர் EPS தான், அவரே CM வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலுக்கு பிறகு EPS எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
News August 25, 2025
வங்கி லோன்.. வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு

வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முதல் முறை கடன் பெறும் பலர் இந்த சிக்கலால் தவித்த நிலையில் அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆனாலும் கடன் பெறுவோரின் நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.