News November 29, 2024
இந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
ஓரமாக நின்ற அண்ணாமலை.. ரிப்போர்ட் கொடுத்த நயினார்?

ஏற்கெனவே அண்ணாமலையை ஓரங்கட்டுவதாக TN பாஜக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், நயினாரின் தேநீர் விருந்துக்காக சென்ற அண்ணாமலை தனியாக நின்று கொண்டிருந்தாராம். இதை கவனித்த அமித்ஷா, அவரை அருகே அழைத்துள்ளார். நயினார் உள்பட மூவரும் விருந்தில் பங்கேற்ற பின்பு தனித்தனியாக ஆலோசித்துள்ளனராம். இதனிடையே, அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டி பணிகள் முழுமையடையவில்லை என நயினார் BL சந்தோஷிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளாராம்.
News August 23, 2025
முன்பு போல் என்னால் முடியவில்லை: சமந்தா

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதில் இருந்து மீண்டார். இதனைத் தொடர்ந்து, கணவரிடம் இருந்து பிரிந்தார். இவ்வாறு பல தடைகளைக் கடந்து வந்ததால், முன்பு போல் தற்போது தன்னால் இருக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் நெருக்கமான கதைகளில் மட்டுமே நடிப்பது, உடற்பயிற்சி ஆகியவையே பிரதானமாம்.
News August 23, 2025
RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும்.
➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள்.
➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.