News November 25, 2024
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

கோவாவின், அர்போரா பகுதியில் ஏற்பட்ட <<18492944>>தீ விபத்தில்<<>> 23 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து துயரத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். PM மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
News December 7, 2025
BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

தவெகவில் இணைந்தபிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றுகிறார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் டிச.16-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடனே பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
News December 7, 2025
கெட்ட எண்ணத்தில் அப்படி சொல்லவில்லை: SA கோச்!

<<18401120>>இந்திய அணி<<>> வீரர்களை மண்டியிட வைக்க நினைத்தோம் என SA கோச் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், கெட்ட எண்ணத்துடன் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவை அதிக நேரம் விளையாட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு சொன்னதாக தெரிவித்த அவர், தான் வேறொரு வார்த்தையை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றார். மேலும், பணிவுதான் SA டெஸ்ட் அணியின் அடித்தளம் எனவும் கூறினார்.


