News November 25, 2024
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
Delhi Blast: மேலும் ஒருவர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. 15 பேர் உயிரிழந்த இச்சம்பவத்தில், ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியை சேர்ந்த பிலால் நசீர் மல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு உதவிகள் செய்ததாகவும், குண்டுவெடிப்பு குறித்த ஆதாரங்களை அழித்ததாகவும் NIA குற்றஞ்சாட்டியுள்ளது.
News December 10, 2025
பாலும் வாழைப்பழமும் ஏன் நல்லது தெரியுமா?

உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து பற்றி கவலையாக இருக்கிறதா? பாலும், வாழைப்பழமும் டிரை பண்ணுங்க. இவை, குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News December 10, 2025
தமிழக பொறுப்பு டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெங்கட்ராமன் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஹாஸ்பிடல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


