News November 25, 2024
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.
News December 5, 2025
சற்றுமுன்: விஜய்யை சந்தித்தார் அடுத்த முக்கிய தலைவர்

சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில், விஜய்யை காங்., மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளார். ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான <<18458010>>பிரவீன்<<>>, சமீபத்தில் தவெகவை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில், கூட்டணி தொடர்பாக பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. தவெக – காங்., கூட்டணி அமையுமா?
News December 5, 2025
புடினை இந்த காரில் PM கூட்டி சென்றது ஏன்? DECODES

Range Rover, Mercedes போன்ற காஸ்ட்லியான கார்கள் இருக்கையில் புடினை, PM மோடி Fortuner-ல் அழைத்து சென்றுள்ளார். Range Rover UK உடையது, benz ஜெர்மனி உடையது. உக்ரைன் போரை கண்டித்து இவ்விரு நாடுகளும் ரஷ்யா மீது அதிக வரிகளை விதித்துள்ளன. எனவேதான் PM அந்த கார்களை தேர்ந்தெடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவையும், வெளியுறவு கொள்கையையும் வெளிகாட்டுவதாக பேசப்படுகிறது.


