News November 25, 2024
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
திருப்பத்துார்: குண்டு வெடிப்பது போல REEL எடுத்ததால் கைது!

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர், ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்று, பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி, குண்டு வெடிப்பது போல் வெடிக்க செய்து வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரித்து ஜோலார்பேட்டை போலீசார், குமரேசனை நேற்று (நவ.26) கைது செய்தனர்.
News November 27, 2025
சத்தியத்தை காப்பாற்ற சொல்லி பதிவிடவில்லை: DKS

கர்நாடகா காங்.,கில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்ற <<18401800>>DKS-ன்<<>> X பதிவு அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதை தான் பதிவிடவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே DKS-ஐ CM ஆக்கினால் ஆதரவு தருவேன் என CM ரேஸில் உள்ளவரும், சித்தராமையாவின் தீவிர ஆதரவளருமான, மூத்த அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News November 27, 2025
WPL திருவிழா: ஜன.9-ல் தொடங்குகிறது

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜன.9-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நவி மும்பையில் உள்ள DY Patil மைதானம், வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 3 சீசன்களில், 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


