News November 25, 2024
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
சற்றுமுன்: தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

2022 அக்.13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த வழக்கில் கைதான சதீஷூக்கு தூக்குதண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.
News November 27, 2025
Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு <
News November 27, 2025
இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம்: SA கோச்!

2-வது டெஸ்டின், 2-வது இன்னிங்ஸில் SA டிக்ளேர் செய்ய ஏன் நீண்ட நேரம் எடுத்து கொண்டது என்ற கேள்விக்கு SA கோச்சின் பதில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. சுக்ரி கொன்ராட் ‘We wanted them to really grovel’ என்ற வாக்கியத்தை உபயோகித்தார். இதில் Grovel என்றால் ஊர்ந்து சென்று அடிபணிவது என பொருள் பெறும். அதாவது அவர், இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம் கூறினார். இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?


