News November 29, 2024
நாளை சென்னைக்கு ரெட் அலர்ட்

புயல் காரணமாக நாளை (30.11.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக, இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி. மலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புண்டு.
Similar News
News April 26, 2025
கல்வியை மட்டும் கைவிடக்கூடாது: CM ஸ்டாலின்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு CM ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘நான் முதல்வன்’ பயன் அளித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். கல்வி தான் நமது ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிடக் கூடாது எனவும் CM அறிவுறுத்தினார். மேலும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
News April 26, 2025
ஹாலிவுட் பிரபலம் அம்பர் கெல்லெஹெர் காலமானார்!

ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை அம்பர் கெல்லெஹெர்(56) காலமானார். இவர் சினைப்பை புற்றுநோயால் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளன. பிரபல சின்னத்திரை தொடர்களான Baywatch, Wings போன்றவற்றில் நடித்துள்ள இவர், அமெரிக்காவின் மிகப்பெரிய மேட்ரிமோனி நிறுவனமான Kelleher International-ன் CEO ஆவார். நம்மூர் கல்யாணமாலை போன்று நிகழ்ச்சிகளையும் ஹாலிவுட்டில் இவர் நடத்தி இருக்கிறார்.#RIP.
News April 26, 2025
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பேரவையில் அஞ்சலி

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதியடைந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 84 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.