News October 22, 2025

4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று(அக்.22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ வார்னிங் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நேரத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News March 11, 2026

இந்த Headphone-களின் விலையை கேட்டா தலை சுத்தும்!

image

பாட்டு கேட்க ஒரு ஹெட்போன் இருந்தால் போதும் என்ற காலகட்டம் மாறி, தற்போது Fashion Statement ஆகவும், பொருளாதார அந்தஸ்தாகவும் ஆகிவிட்டது ஹெட்போன்கள். இதனாலேயே, லட்சக்கணக்கில் காசை வாரி இறைத்து ஹெட்போன் வாங்க சிலர் தயாராக இருக்கின்றனர். அப்படி உலகிலேயே மிகச் சிலர் மட்டுமே பயன்படுத்தும் டாப் 5 எக்ஸ்பென்சிவ் ஹெட்போன்களை அறிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. நீங்கள் பயன்படுத்தும் ஹெட்போனின் விலை என்ன?

News March 11, 2026

விஜய்யை பாஜக முடித்துவிடும்: கொங்கு ஈஸ்வரன்

image

நிதிஷ்குமாரைப் போல இந்த தேர்தலில் EPS-ஐயும், அடுத்த தேர்தலில் விஜய்யையும் பாஜக காலிசெய்துவிடும் என நினைத்ததாக ஈஸ்வரன் கூறியுள்ளார். NDA-ல் விஜய்யை இணைக்க முயற்சிப்பதாக வரும் தகவல்களை பற்றி பேசிய அவர், போகிற போக்கை பார்த்தால் வரும் தேர்தலிலேயே விஜய்யையும் பாஜக முடித்துவிடும் என தெரிகிறது என்றார். மேலும், இது மட்டும் நடந்தால் TN-ல் பாஜக காலூன்ற இவர்கள் உதவுவது தெரிந்துவிடும் என பேசியுள்ளார்.

News March 11, 2026

OPS ஆதரவாளர்கள் ஒன்றாக அதிமுகவில் இணைந்தனர்

image

OPS-ன் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் தீவிர ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, இளங்கோவன் ஆகியோர் தலைமையில் மேலும் பலரை அதிமுகவில் இணைக்க EPS தரப்பு திட்டமிட்டுள்ளது. OPS, திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

error: Content is protected !!