News November 30, 2024

நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Similar News

News April 28, 2025

16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை

image

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ நியூஸ், அக்தர் யூ-டியூப் உள்ளிட்ட யூ-டியூப் சேனல்கள், இந்தியா, இந்திய ராணுவம்- பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவலை பரப்பியதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

News April 28, 2025

BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு

image

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை <<16241060>>CM ஸ்டாலின்<<>> வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது. 01.01.2025 தேதியில் இருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ₹10,000-ல் இருந்து ₹20,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

error: Content is protected !!