News August 27, 2024
சாதனை படைத்த மின் வாரியம்

25.08.2024 ஞாயிறன்று தமிழகத்தில் அதிக பட்சமாக 43.20 மில்லியன் யூனிட் சூரிய சக்தியை மின் கட்டமைப்பில் நுகர்வு செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், அன்று 5648 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்துள்ளது. எனினும், 09.08.2024 அன்று உற்பத்தி செய்த 5979 மெகாவாட் அளவே இதுவரை செய்யப்பட்ட உச்சபட்ச சூரிய உற்பத்தியாகும். இவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் ஒளி மயமான எதிர்காலத்தை குறிக்கின்றன.
Similar News
News July 6, 2025
முடிவுக்கு வருகிறதா பாமக பிரச்னை?

ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ஜூலை 8-ல் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதனால், தந்தை – மகன் இடையே இருக்கும் பிரச்னை முடிவுக்கு வரவிருப்பதாக பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.
News July 6, 2025
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விளம்பரங்களிலும் திட்டத்தின் பதிவு எண், க்யூ ஆர் கோடு, குழும முகவரி இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டப் பகுதியின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளது போன்று தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
News July 6, 2025
குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ₹1 லட்சம்

ரஷ்யாவில் மக்கள்தொகையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட 10 பகுதிகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு இந்திய மதிப்பின்படி ₹1.05 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. முன்பு இது 18+ பெண்களுக்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.