News October 24, 2024
Recipe: சிவப்பு சோளம் புட்டு செய்வது எப்படி?

சிவப்பு சோளம், அவல், முந்திரி (தலா ஒரு கப்) ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து, மாவு பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் உப்பு நீர் தெளித்து, உதிரியாக உடைத்து கொள்ளவும். பிறகு சூடான இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, அதன் மேல் மாவை பரப்பி 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைத்து எடுக்கவும். அதை பாத்திரத்தில் கொட்டி தேங்காய், நெய், பனைவெல்லம் சேர்த்து கிளறினால், சுவையான சிவப்பு சோளம் புட்டு ரெடி.
Similar News
News February 25, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதார தினத்தையொட்டி மார்ச் 4 அன்று குமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மேற்கூறிய மாவட்டங்களில் மார்ச் 7-ல் பள்ளிகள் செயல்படும். மேலும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, அதனை ஈடு செய்ய மார்ச் 14 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2026
நல்லகண்ணுவின் மீசையை கையால் பிடுங்கி சித்ரவதை

தான் சாகும் வரை நல்லகண்ணு மீசை வளர்க்கவில்லை. 1948-ல் CPI தடைசெய்யப்பட்ட போது, தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை தீவிரமாக போலீஸ் தேடிவந்தது. சுமார் ஓராண்டு கழித்து நல்லகண்ணு சிக்க, சிறையில் அவரை தலைகீழாக தொங்கவிட்டு மீசையிலிருந்த ஒவ்வொரு முடியையும் கைகளால் பிடுங்கி போலீஸ் சித்ரவதை செய்துள்ளது. அப்போது ’எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வரை மீசையே வளர்க்கமாட்டேன்’ என நல்லகண்ணு சபதமெடுத்திருந்தார்.
News February 25, 2026
NCERT பாடத்திட்டத்தில் சர்ச்சை.. CJI அதிருப்தி

<<19235285>>NCERT <<>>8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு CJI சூர்யகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகாரை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் CJI முன் கொண்டுவந்தார். அப்போது, நீதித்துறைக்கு யாரும் களங்கம் கற்பிப்பதை அனுமதிக்க மாட்டேன் என்றும், சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் சூர்யகாந்த் உறுதியளித்துள்ளார்.


