News October 24, 2024
Recipe: சிவப்பு சோளம் புட்டு செய்வது எப்படி?

சிவப்பு சோளம், அவல், முந்திரி (தலா ஒரு கப்) ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து, மாவு பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் உப்பு நீர் தெளித்து, உதிரியாக உடைத்து கொள்ளவும். பிறகு சூடான இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, அதன் மேல் மாவை பரப்பி 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைத்து எடுக்கவும். அதை பாத்திரத்தில் கொட்டி தேங்காய், நெய், பனைவெல்லம் சேர்த்து கிளறினால், சுவையான சிவப்பு சோளம் புட்டு ரெடி.
Similar News
News January 13, 2026
ராகு காலம் தெரியும்.. இஷ்டி காலம் தெரியுமா?

அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதி & அதனைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியின் ஆரம்பப் பகுதிகள் இணைந்ததே இஷ்டி காலம். ‘இஷ்டி’ என்பதற்கு யாகம், பூஜை அல்லது அர்ப்பணம் என பொருள். இக்காலத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளும், வரங்களும் கிடைக்குமாம். வீட்டு பூஜைகள், ஹோமம், யாகம், தானம், தர்மம், குல தெய்வ வழிபாடு, உலக நன்மைக்கான பிரார்த்தனை செய்வது மிகவும் உகந்ததாம்.
News January 13, 2026
ராகு காலம் தெரியும்.. இஷ்டி காலம் தெரியுமா?

அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதி & அதனைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியின் ஆரம்பப் பகுதிகள் இணைந்ததே இஷ்டி காலம். ‘இஷ்டி’ என்பதற்கு யாகம், பூஜை அல்லது அர்ப்பணம் என பொருள். இக்காலத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளும், வரங்களும் கிடைக்குமாம். வீட்டு பூஜைகள், ஹோமம், யாகம், தானம், தர்மம், குல தெய்வ வழிபாடு, உலக நன்மைக்கான பிரார்த்தனை செய்வது மிகவும் உகந்ததாம்.
News January 13, 2026
BREAKING: அதிகாலையில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 2 படகுகள், வலைகள், மீன்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 4-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கைது படலம் தொடர்வதாக தமிழ்நாடு மீனவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


