News October 24, 2024

Recipe: சிவப்பு சோளம் புட்டு செய்வது எப்படி?

image

சிவப்பு சோளம், அவல், முந்திரி (தலா ஒரு கப்) ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து, மாவு பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் உப்பு நீர் தெளித்து, உதிரியாக உடைத்து கொள்ளவும். பிறகு சூடான இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, அதன் மேல் மாவை பரப்பி 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைத்து எடுக்கவும். அதை பாத்திரத்தில் கொட்டி தேங்காய், நெய், பனைவெல்லம் சேர்த்து கிளறினால், சுவையான சிவப்பு சோளம் புட்டு ரெடி.

Similar News

News December 25, 2025

தருமபுரி: தொப்பூர் அருகே தொடரும் விபத்து!

image

தருமபுரி, நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில், இன்று (டிச.25) விடியற்காலை காலை 2 மணி அளவில் கனரக வாகனா லாரி தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில், வாகன ஓட்டுநர் சிறிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு நேர்ந்தது. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 25, 2025

பொங்கல் பரிசுடன் பணம்.. கடந்து வந்த பாதை

image

பொங்கல் பரிசு குறித்த அரசின் அறிவிப்பு தள்ளிப்போவதால் மக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2026 பொங்கல் பரிசுடன் ரொக்கம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தல் சமயம் என்பதால் பம்பர் ஆஃபராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கும் வழக்கம் எப்போது வந்தது எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

News December 25, 2025

ஒரே வீட்டில் 44 பேர் எரித்துக் கொலை.. ஓயாத ஓலம்

image

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

error: Content is protected !!