News May 23, 2024
பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதன் காரணங்கள்

இந்திய பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருகின்றனர். மத்திய அரசுக்கு RBI ₹2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை தருவதாக அறிவித்தது சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Technical Factorஇன் படி 22,800 என்ற வலுவான தடையை நிஃப்டி உடைத்ததும் காரணமாக சொல்லப்படுகிறது.
Similar News
News March 6, 2026
CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது
News March 6, 2026
SPORTS 360°: இன்று இந்தியா W – ஆஸி., W டெஸ்ட்

*இந்தியா, ஆஸி., மகளிர் அணிகள் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடக்கம் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் *U20 மகளிர் கால்பந்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வீழ்த்தியது *ISL கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகளுக்கு இடையிலான மோதல் கோலின்றி டிராவில் முடிந்தது *ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷித் கான் நீக்கம்
News March 6, 2026
இந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை!

இந்தியாவில் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% ஆக இருக்கையில், பட்டதாரிகளிடையே இது 4 மடங்கு அதிகமாக (13%) உள்ளது. குறைந்த கல்வி தகுதி உள்ளவர்கள் ஏதேனும் சிறிய வேலையில் சேரும்போது, பட்டதாரிகள் அவர்களுக்கான வேலையை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர். இதற்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


