News April 5, 2025
ஏசி தீப்பிடிக்க காரணங்கள்

*கண்டென்சர் காயிலில் தூசிகள் அதிகம் சேர்வதால், வெப்பம் வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சூடாகிறது *மட்டமான வயரிங், ப்ளக் பயன்பாடு, பழைய வயர்கள் பயன்படுத்துவது *வோல்டேஜ் ஏற்ற இறக்கம் *ஏசிக்கு உரிய கேஸ் வகைகளை பயன்படுத்தாமல், தவறான கேஸ் பயன்படுத்துவது. இந்த தவறுகளை முற்றிலும் தவிர்த்தால், ஏசி தீப்பிடிக்கும் விபத்துகளையும் தடுக்கலாம்.
Similar News
News January 2, 2026
FLASH: 2,700 பேர் மரணம்

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு முன் யாராலும் தப்ப முடியாது. 2025-ல் இயற்கை சீற்றங்களால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரத்தை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓராண்டில் மட்டும் 2,760 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், கனமழை, வெப்ப அலை என அதிதீவிர வானிலை நிகழ்வுகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 2, 2026
செல்லூர் ராஜுவை முந்திவிட்டார் KAS: சாமிநாதன்

விஜய்யை CM பதவியில் அமர வைப்பதே தனது இலக்கு என செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், காங்கேயத்தில் இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன், விஜய்யை நிரந்தர முதலமைச்சர் ஆக்குவேன் என செங்கோட்டையன் கூறி வருவது சிறந்த நகைச்சுவை என்று விமர்சித்துள்ளார். காமெடி செய்வதில் செங்கோட்டையன், செல்லூர் ராஜுவை பின்னுக்கு தள்ளிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 2, 2026
கசாப்புக்கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவதா? BJP

போதை பொருள்களை ஒழிப்பதில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என CM ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டி H.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுபான ஆலைகளை திமுக தலைவர்களே நடத்திக் கொண்டு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து CM பேசுவது, கசாப்புக்கடைக்காரன் ஜீவகாருண்யம் பற்றி பேசுவது போல இருப்பதாக அவர் சாடியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகிகளின் பட்டியலையும் SM-ல் பதிவிட்டுள்ளார்.


