News February 28, 2025
பிரதமரின் டிகிரி சான்றிதழை காட்ட தயார்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை காட்ட தயார் என டில்லி ஐகோர்ட்டில் டில்லி பல்கலை. தெரிவித்துள்ளது. ஆனால், பாதுகாப்பு கருதியும், பிரதமரின் தனிநபர் சுதந்திரம் கருதியும், இந்த தகவல்களை பொதுவெளியில் காட்ட முடியாது எனவும் கூறியுள்ளது. பிரதமர் டிகிரி முடித்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி, மத்திய தகவல் கமிஷனிடம் நீரஜ் என்பவர் சான்றிதழை கோரினார். இதை எதிர்த்து பல்கலை. வழக்கு தொடர்ந்தது.
Similar News
News February 28, 2025
ஜெயப்பிரதாவின் அண்ணன் காலமானார்!

பிரபல நடிகையும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவின் அண்ணன் ராஜா பாபு நேற்று மதியம் 3:26 மணிக்கு மரணமடைந்துள்ளார். இது குறித்த பதிவை வெளியிட்ட ஜெயப்பிரதா, ‘அவரை உங்களின் பிரார்த்தனைகளில் வைத்து கொள்ளுங்கள்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். பெரிதும் பிரபலமில்லை என்றாலும் ராஜா பாபு, தனது சகோதரியின் திரை வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
News February 28, 2025
கலி முத்திருச்சு.. இதோ எடுத்துக்காட்டு!

77 வயது தாயை பார்த்து கொள்ள முடியாத மகனை கோர்ட் கடுமையாக விமர்சித்துள்ளது. ₹5,000 தர உத்தரவிட்ட செஷன் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மகன், ஹரியானா ஹைக்கோர்ட்டை நாடினார். இதில் நீதிபதி, ‘இது கலி யூகத்தின் எடுத்துக்காட்டு’ என விமர்சித்தார். மேலும், 3 மாதத்தில் தாயார் பெயரில் ₹50,000 டெபாசிட் செய்யவும், மாதம் ₹5,000 கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இப்படியும் சில மகன்கள்.. என்னவென்று சொல்வது!
News February 28, 2025
Headphone போட்டால் ஆபத்து: அரசு

Earphones, Headphones, Earbuds ஆகியவற்றை நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இப்படி பயன்படுத்துவது, செவியின் கேட்கும் திறனை குறைத்து, நிரந்தர காது கேளாமையை உண்டாக்கக்கூடும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகநேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.