News August 15, 2024
தலித் சமூகத்தவரை CM ஆக்க பாமக தயார்: அன்புமணி

2026 தேர்தலில் பாமகவுக்கு தலித் அமைப்புகள் ஆதரவளித்தால், அச்சமூகத்தவரை தங்களது கட்சி CM ஆக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கீழ்சிவிரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு முதன்முதலில் இடம் கிடைத்தபோது, பட்டியல் சமூகத்தவர் எழில்மலைக்கே பதவியை பாமக வழங்கியதாக கூறினார்.
Similar News
News November 24, 2025
542 பணியிடங்கள்.. இன்றே கடைசி: APPLY

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10th, ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹18,000 – ₹63,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 24, 2025
ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்.. வந்தது அலர்ட்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் வருவதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
ராஜ்யசபா சீட்: பிரேமலதா கொடுத்த புது விளக்கம்

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பிரேமலதா புது விளக்கத்தை கொடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா MP தருவதாக அதிமுகவினர் உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025-ம் ஆண்டிலா 2026-ம் ஆண்டிலா என்று கூறவில்லை. நாங்கள் 2025 என நினைத்ததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால், எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


