News August 15, 2024
தலித் சமூகத்தவரை CM ஆக்க பாமக தயார்: அன்புமணி

2026 தேர்தலில் பாமகவுக்கு தலித் அமைப்புகள் ஆதரவளித்தால், அச்சமூகத்தவரை தங்களது கட்சி CM ஆக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கீழ்சிவிரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு முதன்முதலில் இடம் கிடைத்தபோது, பட்டியல் சமூகத்தவர் எழில்மலைக்கே பதவியை பாமக வழங்கியதாக கூறினார்.
Similar News
News December 24, 2025
BREAKING: தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

நெல்லையில், 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தையே உலுக்கிய இவ்வழக்கில் 7 மாதங்களில் தீர்ப்பு அளித்துள்ள நெல்லை போக்சோ கோர்ட், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு TN அரசு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்ற மகளை பாதுகாக்க வேண்டிய தந்தையே அவரை சிதைப்பது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என நீதிபதி கூறியுள்ளார்.
News December 24, 2025
மனதை உலுக்கிய கூட்ட நெரிசல் மரணங்கள்.. REWIND 2025

ஏனோ 2025 இந்தியாவில் பெரும் சோகங்களை கொடுத்துவிட்டது. பல இடங்களிலும் மக்கள் கொத்து கொத்தாக மரணித்தனர். அப்படி கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த துயர நினைவுகளை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை பார்க்கவும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இவை மறக்க முடியாத வடுவாக மக்களின் மனதில் இருக்கும்.
News December 24, 2025
பொங்கல் பரிசு ₹5,000.. அமைச்சர் கொடுத்த அப்டேட்

பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு தற்போது வரை வெளியிடாமல் இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், CM ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற அப்டேட் கொடுத்துள்ளார்.


