News April 8, 2025

ஜெயிலுக்கு போகவும் தயார்: பா.ரஞ்சித்

image

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ‘சந்தோஷ்’ மற்றும் ‘நசீர்’ படங்களை பொதுவெளியில் திரையிட்டு சிறைக்கு செல்லவும் தயாராக இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சாதி, மத பாகுபாட்டை உரக்க சொல்லும் இப்படங்களை திரையிடுவது பெரிய குற்றம் ஒன்றும் இல்லை எனவும், ஏற்கனவே திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், லைசன்ஸை கேன்சல் செய்துவிடுவதாக பிரசாத் லேப் அச்சுறுத்தபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News April 8, 2025

வருண் குமார் வழக்கு… சீமானுக்கு பிடிவாரண்ட்?

image

டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு நேற்று திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சம்மன் கொடுக்கப்பட்ட சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதியளிக்க அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற நீதிபதி, சீமான் இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

News April 8, 2025

ISL இறுதி போட்டியில் மோகன் பகான்

image

11வது ISL இறுதி போட்டிக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. 2-வது அரையிறுதியின் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் மோகன் பகான் – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. இதில் மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்தது. முதலாவது சுற்றில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இரு ஆட்டங்களின் கோல்களின்(3-2) அடிப்படையில் மோகன் பகான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

News April 8, 2025

மிரட்டல் கடிதம்.. அவசரமாக தரையிறங்கிய விமானம்..

image

255 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து வெடி குண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!