News April 10, 2024

எந்த விசாரணைக்கும் ஆஜராக தயார்

image

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக எந்த விசாரணைக்கும் ஆஜராக தயார் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மதுரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அவர், அமலாக்கத்துறை விசாரணை நேர்மையாக நடப்பதாகவும், அழுத்தம் காரணமாக விசாரணை நடக்கிறதா? என்பது தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இறைவன் மிகப்பெரியவன் என்றும், தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News January 19, 2026

ஜன நாயகன் வழக்கு.. புதிய பரபரப்பு தகவல்

image

ஜன நாயகன் தணிக்கை சான்று தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாளை சென்னை HC-ல் விசாரணைக்கு வருகிறது. காலை 11:30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடக்கும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டால் ஜன நாயகன் விரைவில் ரிலீசாகும். சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டால் படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்.

News January 19, 2026

நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ₹9,000 கோடி கேட்கும் டிரம்ப்

image

காசாவின் அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (₹9,000 கோடி) செலுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. இந்தியாவின் <<18893549>>PM மோடி <<>>உட்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பணம் செலுத்தவும், இந்த நிதி காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

News January 19, 2026

பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்குறீங்களா.. ALERT!

image

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான நீர் இருக்கும் என்பதால் அவசியம் இல்லை. அதையும் மீறி அதிகமாக தண்ணீர் கொடுத்தால் குழந்தைக்கு சேரவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம் என்கின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு தினமும் 2 – 8 ஸ்பூன் வரை இடைவெளிவிட்டு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கலாம். SHARE.

error: Content is protected !!